Monday, August 14, 2006

அஞ்சலி

மரத்தாயின் மடிமண்ணில்
மடிந்திருக்கும் - பூமக்கள்.

இரக்கமில்லா அவசரக்கால்களில்
மிதிபடும்
அதன் சடலங்கள்.

சோகச் சொல்லெடுத்து
அஞ்சலிக் கவிதை வடிக்கையில்
கவனித்தேன் -
நசுங்கிய இதழ்கள்
என் கால்களிலும்.

வெட்கி மரித்த
என் கவிதைக்கு
அஞ்சலியாய் வீழும் -
இன்னும் சில
பூக்கள்.

/2001

No comments: