Wednesday, September 22, 2010

பேரமைதி

ஒரு கனி
இரு பசி
தெறிக்கும் இரத்தம்

எஜமானன்
அடிமை
இவன் அவனாக
அவன் இவனாக
உருளும் சரித்திரம்

ஒரு பூமி
பல்லுயிர்கள்
அரித்துக் கொண்டிருக்கிறோம்

பசியில்லாத உயிர்கள்
உயிர்களில்லாத பூமி
பூமியில்லாத பிரபஞ்சம்
பிரபஞ்சமில்லாத ஏதோ
பேரமைதியில்
இருந்திருக்கக் கூடும்

பிரபஞ்சம் எப்போது உருவானது
எங்கிருக்கிறோம்
என்ற கேள்வி எழுந்த போது - ஆக
கேள்வியே இல்லாத போதும்
அந்தப் பேரமைதி வாய்க்கக் கூடும்