Friday, January 20, 2017

பயணம்

கடும்பாதை
நெடும்பயணம்
கொடுஞ்சுமை

கொதிக்கும் மணல்
கொப்பளித்த பாதங்கள்
வறண்ட கண்ணீர் குளம்

தயைதண்ணீர் கேட்கும்
திராணியில்லை
நிழல்யாசகம் வேண்டும்
நினைப்பேயில்லை

யார் வந்தாலென்ன
யார் போனாலென்ன
நிற்காதிந்த பயணம்

அடுத்த அடி எடுத்து வைக்க
தீராத்தனிமை துணையிருக்கும்
உயிர்போன பின்னாலே ஓய்விருக்கும்