Thursday, February 23, 2017

யாருக்குத் தெரியும்

மாபெரும் மலைதனை கடந்து
பேரிருள் படர்ந்த
அடர்வனத்திடை அலைந்து

செம்பூவிதழ் வேய்ந்த
பூங்குடில் வந்தடைந்து
காற்றென நுழைந்து - அதன்
கதவுகள் திறந்து

கால் கிழிக்கும்
கண்ணாடித்துண்டுகளாய்
சிதறிக்கிடக்கும் - உறைந்த
கண்ணீர்துளிகள் கடந்து

கண்ணுக்குப் புலப்படாத
இருட்டறையில் புதைந்திருக்கும்
பெட்டகத்துள் ஒளிந்திருக்கும்

என் இதயத்தின் திறவுகோல்
கண்டெடுக்க -
யாருக்குத் தெரியும் ?
கண்மணியே உனையன்றி
யாருக்குத் தெரியும் ?