Monday, August 14, 2006

எங்கே போகின்றாய் ?

பழகிப்போன யுத்தக்களத்தில்
இன்றும் இன்றும் விழிக்கின்றேன்
இமையாய் துடிக்கும் இதயம் தேடி
மீண்டும் மீண்டும் தொலைகின்றேன்

என் கண்கள் கனக்கும் காலப்பொழுதில்
கன்னக்குழியோடு வருகின்றாய்
ஒட்டடை கோர்த்த மயிலிறகாக
கொட்டிக் கிடக்கும் நினைவெல்லாம்
எடுத்துக் கொடுத்துப் போகின்றாய்

நினைவுச்சுகத்தில் உறங்கும் மனது
விழித்த உடனே உன்னைத் தேடும் -
எங்கே எங்கே போகின்றாய் ?

/2001

1 comment:

Anitha Jayakumar said...

"இமையாய் துடிக்கும் இதயம்"
.
.
.
"ஒட்டடை கோர்த்த மயிலிறகாக"

eppadinga ippadi ellam ezhudhareenga? chancea illa... :)