Tuesday, August 15, 2006

இருத்தல்

உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு
காலின் கீழே உலகம் நழுவும்
விரித்தால் உதிரும் இருகைச் சிறகும்
விழிநீர்த்திரளாய் விழியும் வழியும்
கைப்பிடி பொருளும் காற்றில் கரையும்
நிலையில் மருண்டு நினைவும் துவளும்
இருந்தும் நீயும் -
உயிர்த்திரு உணர்வே உயிர்த்திரு!

பொறுத்திரு மனமே பொறுத்திரு
கனவைக் கொளுத்தி காலம் சிரிக்கும்
விடியும் பொழுதும் இரவாய் தொடரும்
உதறும் உள்ளம் உறவாய் இருக்கும்
நினைவுப்பையை முட்கள் நிரப்பும்
உன்னைச் சிரிக்கும் ஊரும் பேரும்
இருந்தும் நீயும் -
பொறுத்திரு மனமே பொறுத்திரு!

விழித்திரு உயிரே விழித்திரு
நீ சொன்னால் மட்டும் உலகம் சுழலும்
விடுக்கும் வார்த்தை தலையாய் அசையும்
ஊரைக் கூட்டி மேடை மெச்சும்
உறவால் வீட்டின் அறைகள் நிறையும்
பூக்கள் சூழ்ந்து இனிக்கச் சிரிக்கும்
இருந்தும் நீயும் -
விழித்திரு உயிரே விழித்திரு!

/2004

2 comments:

Anitha Jayakumar said...

indha madhiri enakku yen ezhudha varalai nnu ninaikka veitha poem... nice one...

-ganeshkj said...

Thanks Anitha, I never got such comments on this kavidhai..my experiences so far are like - when i showed this kavidhai to my friend, he started reading it aloud in a musical tone - "உயர்திரு உணர்வே உயர்திரு" ... I thanked him and snatched the kavidhai from his hands :))