Tuesday, August 15, 2006

பிரிவு - 2

பிரிவு தான் இது
பிரிந்து போ

என் விழிகளுக்கு
எட்டாத தொலைவில்
தொலைந்து போ

உன் உலகில்
உன்னைப் பூட்டிக் கொள்
என் பிறந்த நாளை மற
எனக்குப் பிடித்ததெல்லாம் மற
என்னையும் மற

ஆனால்
என்றேனும் என் நினைவுச்சறுக்கத்தில்
விழுந்துருண்டு
நான் மூர்ச்சிக்கையில்
உன் பெயரை மட்டும்
உச்சரிப்பேன்

அன்று மட்டும்
மறக்காமல்
உன்னை அனுப்பி வை.

/2001

2 comments:

Anitha Jayakumar said...

"nee po po engiraaaiiii...
aanaal poi solgirai..." nu oru paattu nyabagathukku vandhuduchu...

painful poem... choice of words has brought the right heaviness.

Anonymous said...

உங்கள் தனித்துவம் தெரிகிறது.
இருந்தபோதிலும்.
சு.ரா போன்றோர்களின் தாக்கமும் புலப்படுவதாய் நான் நினைக்கிறேன்.