Monday, August 14, 2006

கண்மணிக் கவிதைகள் - 1

வழிகின்ற கண்ணீரின்
கன்னத்து வழித்தடத்தை
விரல் துளியால்
துடைக்கும் -
மழை.

உடையெல்லாம் சலசலக்க
உடலோடு கட்டிக் கொண்டு
உள்ளம் வரை
வருடிச் செல்லும் -
தென்றல்.

வாழ்கைவழித் திருப்பத்தில்
தொலைத்து வைத்த சிரிப்பெல்லாம்
அள்ளி வந்து
இதழ் நிறைக்கும் -
மழலை மொழி.

நினைவுகளின் சுமை அழுத்தி
இறுக்கம் கண்ட
மனதெல்லாம்
சட்டென்று சிறகாக்கும் -
பூக்கூட்டம்.

இவையோடு இருக்கும் போது
எங்கோ நீ இருந்தாலும் -
உன்னை உணர்கின்றேன்
எந்தன் கண்மணியே !

/oct, 2005

No comments: