Saturday, September 2, 2006

நான்

விழிகளை விழிநீர் மறைக்க
விழிநீரை விழிநீர் மறைக்க
வழியும்
என் வலிகள்

வலிச்சுமை தாளாமல்
விரல்களைக் கொளுத்திய வெளிச்சத்தில்
ஓற்றையாய் திசைகளைத் தேடும்
என் பாதைகள்

நிஜங்களின் மரணத்தால்
அமைதியாய் துயில்கையில்
நிழல்களின் சூடுபட்டு
திடுக்கிடும்
என் உணர்வுகள்

காய்ந்து உதிர்ந்திடும் பயத்தால்
இதழ்கள் மலர மறுத்து
மொட்டாய் கட்டுக்குள்
என் கனவுகள்

வழிப்பட்ட வானையெல்லாம்
தன் முதுகிலே சுமந்து கொண்டு
வியர்த்து அயர்ந்திருக்கும்
என் சிறகுகள்

என்னவை இவையெல்லாம்
என் மீது போர்த்திக் கொண்டு
உள்ளுக்குள் உயிரோடு -
நான்

/2000

No comments: