Saturday, September 23, 2006

எ.பி.சு.ரா.க - 3

இன்னொரு சு.ரா. கவிதை.

==============
கடல் சிரித்தது
==============
கல்லும் பிராணன் இழுத்து
மேலெழுந்து பறந்தது.

அலைகள் பாதம் முளைத்துக்
கரையேறி வந்தன.

திசுக்கள் பரிணமித்து
வேதங்கள் கோஷித்தனர்.

மூளைச் சுடரின் அங்குசம்பட்டு
பிளிறி எழுந்தன யானைகள்.

மின்னலும் மழையும்
பின்பக்கம் நின்றன.

அத்தனையும் முடிந்து
ஒரு விசும்பல் எழுந்தது.

ஏன் என்றது வானம்.
நான் யார் என்று கேட்டது
மண்ணில் ஒரு குரல்.
கடல் சிரித்தது.

- சுந்தர ராமசாமி 1975

No comments: