Monday, January 1, 2007

மரபின் கேள்வி

வேர்கள் இல்லாத மரமொன்று
காற்றினில் மிதந்து கொண்டிருக்கிறது

உலுத்துப் போன தன் வேர்களை
வலியை மீறி அறுத்தெறிய நேர்ந்த
அதன் துக்கமோ

எந்த கணமும் நிகழ்ந்துவிடக்கூடிய தன் சரிவை
பலங்கொண்ட மட்டும் எதிர்த்து
தன் தளிர்களை மேலெழுப்பும்
அதன் பிராயத்தமோ

மேகத்திலிருந்து நீர்உறிஞ்சக் கற்று
தன் உயிர்ப்பை நிலைநிறுத்த
அதன் கிளைகள் படும் அவஸ்தைகளோ

உரம் மிக்க அதன் புதுவேர்கள்
பூமி நோக்கி மெதுவாய்
இறங்கிக் கொண்டிருப்பதோ

நம் கண்களுக்கு
தெரிவதே இல்லை

நம்மிடம் இருப்பதெல்லாம்
மரபின் கேள்வி மட்டும் தான் -
வேர்களை இழந்து போய்
விறகுக்கு ஆனபின்னும்
இது பூப்பது யாருக்காக ?

/1st Jan, 2007

2 comments:

ப்ரியன் said...

அருமை கணேஷ்

Jana said...

நம்மிடம் இருப்பதெல்லாம்
மரபின் கேள்வி மட்டும் தான் -
வேர்களை இழந்து போய்
விறகுக்கு ஆனபின்னும்
இது பூப்பது யாருக்காக ?

-- அருமையான வரிகள்!
மொத்ததில் ஆழமான அழகான சிந்தனை.