Thursday, January 4, 2007

தொலைவு

எத்தனை வருடமாய்
இந்த வேலையில் நான் இருக்கின்றேன்
சம்பளம் எவ்வளவு தருகிறார்கள்
அடிக்கடி என்னை அமெரிக்கா அனுப்புகிறார்களா
வாடகை வீட்டிலா நான் இருக்கிறேன்
நான் வாழும் தெருவில் கார் நுழையுமா
என் தந்தை என்னவானார்
என் உடையில் எடையில்
மேல்தட்டின் பிடிமானம் எவ்வளவு

எல்லாம் அளந்து பார்த்து
எனக்கும் அவருக்கும் உள்ள தொலைவை
எனக்குத் தெரியாமல் சரிபார்ப்பதாய் எண்ணி
நொடிக்கொருதரம் புன்னகைக்கிறார்

ஆனாலும் கடைசி வரை
நான் விரும்பிப் படித்த புத்தகம் எதுவென்று
அவரும் கேட்கவில்லை

இன்னும் நான் அறிந்திராத
அவர் பெண்ணுக்கு
ஒரு கவிதை எழுதியிருப்பதாய்
நானும் சொல்லவில்லை.

/5th Jan, 2007

5 comments:

Jana said...

இது அனுபவமா கணேஷ்?:) ஆனாலும் மிக அழகாக உண்மையை பதிவு செய்தது நன்று!

Anitha said...

che chance illa ganesh... kalakkiteenga... ivlodhanda neengangara aluppu romba stronga velipattirukku... congrats for such a nice poem.

AKV said...

:-)

Ganesh ! a lot more is waiting for us !!! Let us not get surprised rather prepare ourselves to face things as they are !

ப்ரியன் said...

அருமை கணேஷ்

M.Saravana Kumar said...

அருமை.. மிக அருமை..