Wednesday, October 4, 2006

என்னை அறிவீரா?

மழலை வாய்மொழிக் குழறலாய்
சிதறிக் கிடப்பேன் -
அள்ளிக் கோர்த்தெடுத்து எந்தன்
அர்த்தம் படிக்கத் தெரியுமா ?

காற்றாடும் காய்ந்த இலைப்பரப்பில்
பச்சைய மிச்சமாய் ஒட்டிக்கிடப்பேன் -
என் வண்ணம் அறியும்
வகை அறிவீரா ?

உண்ர்வோடு ஒட்டாத சப்த இரைச்சலில்
அறுபட்ட மெளனம் ஒன்று
அலறித் துடித்து இறக்கையில்
திறக்கின்ற செவிகள் உண்டா ?

மரத்தாயின் மடிமண்ணில்
மடிந்திருக்கும் பூமக்கள்
சடலம் அள்ளும் காற்றோடு மன்றாடும்
அவள் வேதனைக்குத் தோழைமையாய்
நின்றிருப்பேன் - என்னை அறிவீரா ?

/2001

No comments: