Sunday, October 8, 2006

கவிப்பயன்

இதனால் அறியப்படுவது யாதெனின்
இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

தன் அதிமேதாவித்தனத்தை
பிரகடனம் செய்து
எழுதும் ஒவ்வொரு எழுத்தையும்
காகிதப்பணமாய் பண்டமாற்றும் வித்தை
கைவரப் பெற்று
பக்கம் நான்கு வரிகள் நிறைத்து
புத்தகம் பத்து வெளியிட்டு
மொழியைப் பிழிந்தெடுத்து
பட்டங்கள் சூடிக் கொண்டு
காதலர்கூட்டத்தின் கரகோஷம் பெற்று
அதில் கயல்விழிப் பெண்ணொருத்தி
கையொப்பம் கேட்காமற் போனால்

இன்றைய தேதியில் கவிதைகளால்
வேறொன்றும் பயனில்லை.

இந்த சப்தங்கள் எட்டாத தூரத்தில்
மனத்தின் இருட்டறையில் காயங்கள் சுமந்து
சுருண்டு கிடந்தவனை
பாந்தமாய் தொட்டெழுப்பி
சன்னலொன்றைத் திறந்து வைத்து
வானமாய் விரிந்து கிடந்தது
ஒரு கவிதை.

/8th Oct, 2006

4 comments:

Anitha Jayakumar said...

ella kavidhaigalume indha karanangalla onnuthuleyavadhu fit aagidudhu...

மொழியைப் பிழிந்தெடுத்து oru kavingyana thavira vera yaarume ippadi ezhudha mudiyadhu...

sogamana unmaigal

AKV said...

Very simple and romba yaedhaarthama oru kavidhai... Keep writing more like this. Have read enough about feeling of love and its failures !!!

MSK / Saravana said...

அருமை.. மிக அருமை..

MSK / Saravana said...

வார்த்தைகளே இல்லை நண்பனே.. இக்கவிதைக்கு மறுமொழியிடுமளவுக்கு..
நீங்களே எல்லா வார்த்தைகளையும் பயன்படுத்திவிட்டதால்..