Wednesday, October 25, 2006

தேங்கிக் கிடப்பவை

மலர்ந்த தருணம் எதுவென்று அறியவில்லை
அத்தனை இதழ்களிலும் தெளிவான அழகு
வலிக்குமோ என்றபடி தயங்கித்திரளும் பனித்துளி
சுற்றிலும் அமைதியோடிழைந்த நறுமணம்
அப்படித்தான் உணர்ந்ததாய் ஞாபகம்
என் நினைவறையில் முதன்முதலாய்
சேர்த்து வைத்த உன் பிம்பத்தை.

சில பரிட்சயங்கள் கடந்து
என்னில் தன் ஆளுமை உறுதியானபின்
அவ்வப்போது உன் பிம்பம்
இறுகிக் கனத்து சுதாரித்து இயல்பானதில்
எழுந்த என் தத்தளிப்பை
சிரித்து மழுப்பி பழகிக்கொண்டேன்.

காலச்சூட்டில் மயக்கங்கள் விலகி
விழுந்த வெளிச்சத்தில்
உன் பிம்பத்தின் விகாரம் ஓங்கி வளர
பற்றிக்கிடந்த என் நினைவுகள்
மூர்ச்சையடைந்து விழுந்தன.

காணக்கிடைக்காமல்
உன் பிம்பம் கலைந்துபோய்
காலம் வெகுவாகிப் போனாலும்
என் நினைவறையில்
இன்றும் தேங்கிக் கிடக்கின்றன -

அந்த இதழ்களின் நறுமணமும்
நீ சொறுகிய வார்த்தையில்
சொட்டும் என் இரத்தமும்.

/25 Oct, 2006

2 comments:

Anitha Jayakumar said...

enna dhan munnerittalum... vera disaigal la poittalum... sila nyabagangal innamum adhe pazhaya valiyum dhukkamum kondu vandhududhu...

valiyum meeri andha gentleness describe pannina magnanimity kku congrats...

MSK / Saravana said...

சில பரிட்சயங்கள் கடந்து
என்னில் தன் ஆளுமை உறுதியானபின்
அவ்வப்போது உன் பிம்பம்
இறுகிக் கனத்து சுதாரித்து இயல்பானதில்
எழுந்த என் தத்தளிப்பை
சிரித்து மழுப்பி பழகிக்கொண்டேன்.


நீ சொறுகிய வார்த்தையில்
சொட்டும் என் இரத்தமும்...

வார்த்தைகளே இல்லை நண்பனே.. இக்கவிதைக்கு மறுமொழியிடுமளவுக்கு..