Wednesday, September 2, 2009

தூக்கம் எனும் வரம்

"நான் தூங்கப்போறேன்பா"
சொன்ன இரண்டாம் நிமிடத்தில்
பூப்போல்
உறங்கிவிடுகிறாள் மனைவி.

ஆச்சரியமாய் பார்த்துக் கொண்டிருந்தவன்
"என்ன இரகசியம்பா"
என்று ஒருநாள் கேட்டேன்.

"மனசை லேசா வச்சுக்கணும்
மண்டைல நிறைய போட்டு குழப்பக்கூடாது
அப்புறம் இதுமாதிரி தூங்கறவங்கள பார்த்து
கண் வைக்கக் கூடாது" என்று சிரித்தாள்.

அன்றைய இரவும்
உலகத்தை எடுத்துக் கொண்டு
என்னிடம் வந்து படுத்தேன்.
ஒரு கட்டத்தில்
மனதை லேசாக வைத்திருப்பதைப் பற்றி
தீவிரமாக விவாதிக்கத் தொடங்கினோம்.

பூப்போல் மனைவி
உறங்கிக் கொண்டிருந்தாள்.

No comments: