Saturday, October 24, 2009

கலையும் கவிதைகள்

வட்டத்துக்குள் உத்வேகத்துடன்
ஓடத் தொடங்குகிறேன்
எல்லோரும் பயணிக்க
இதோ உருண்டோடும்
என் வாழ்க்கை

சற்று கண்ணயர சாய்ந்தவனை
ஓங்கி முதுகில் அறைந்து
உலுக்கும் யதார்த்தத்தில்
ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை

என்றாலும்
ஒரு கவிதைக்கான தருணங்கள்
இப்போதெல்லாம்
மிக எளிதாகக் கலைவதில்
சிறிது வருத்தம் தான்

என்றாலும்
அதனால் ஏதும்
குறையொன்றுமில்லை
குறையொன்றுமில்லை.

No comments: