Friday, June 26, 2009

இந்த நாளில்

விரும்பி வாங்கிய புத்தகம்
வீசி எறிந்ததில் கிழிந்தது

தேடித்தேடி வண்ணம் சேர்த்து
நெடுநேரம் சிரத்தையோடு
வரைந்த ஓவியம்
முடித்ததும் நிறமிழந்து போனது

இருகை விரித்தழைக்கும்
என் பிள்ளையின் மழலைச் சிரிப்பை
எளிதாக நிராகரித்துப் போகிறேன்

மனிதத்தின் தோலுரிந்து தசைகள் முறுக்கி
ஈறு தெரிய என் மிருகம் உறுமுகிறது

உன் துரோகத்தின் நினைவுகளை
சுமந்து நிற்கும் இந்த நாள் முழுதும்
போதனைகள் கடந்து
வன்மம் கொண்டலைகிறது
என் பிரேதம்.

No comments: