Tuesday, April 28, 2009

பதிவுத் தபாலில் புத்தகம்

பதிவுத் தபாலில் புத்தகம்
வந்து சேர்ந்தது

தடிமனான நூற்கயிற்றால் இறுக்கியதில்
மூச்சுத்திணறி
நாற்புறமும் தடம் பதிந்திருந்தது

கடைசி இருபத்தியேழு பக்கங்கள்
அலட்சியமாக மடங்கி நைந்திருந்தது

ஒரு பக்கத்து அட்டை மழைநீர் இறங்கி
ஈரம் கோர்த்திருந்தது

கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது
எழுதியவனுக்கு எப்படியிருக்குமோ

1 comment:

ny said...

கொஞ்சுகிறது கவிதை
அஞ்சலை வைது.. :))