Saturday, November 11, 2006

விசும்பல்

என் நரம்புகளின் முடிச்சிலிருந்து
விண்ணென்று தெறித்துப் புறப்பட்டு
வீரியம் குறையாமல்
நெடும்பாதை பயணப்பட்டு
மூளைச்சிக்கல்களில் அமைதியாய் ஊடுருவி
சற்றும் எதிர்பாராமல்
துல்லியமான ஓர் அதிர்வுக்கோளத்தை
நாற்புறமும் வெடித்துப் பரவ விட்டு
உறைந்திருந்த பக்கங்களில்
அடர்மின்னலை சீறிப்பாய்ந்து
சிலிர்த்தெழுந்த உணர்வுகள் தறிகெட்டோடி
வார்த்தைச்சுரங்கத்து இருட்டில்
தேடித் துழாவி ஏதும் கிடைக்காமல்
அத்தனை அவஸ்தைகளும்
மெல்லிய விசும்பலாய் வெளிப்பட்டு
மரணித்து அமைதியானபின்
மற்றொன்று...

/11th Nov, 2006

1 comment:

Anitha Jayakumar said...

visumbal idhayathulerndhu varumnu ninaichen... appovum adhoda padhai track panni kavidhaiya mathirukeenga... interesting poem... description is brilliant...