Saturday, November 4, 2006

எ.பி.சு.ரா.க - 4

=============================
கதவைச் சுண்டாதே தயவுசெய்து
=============================
நான் இங்கு இருக்கிறேன்.
இங்கு இச்சிறிய அறையில்.
சிறிய சன்னல் சிறிது வெளிச்சம்.

தயவுசெய்து உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்
சாத்தியிருக்கும் என் கதவைச் சுண்டாதே
எனக்கு உன் ஓசைகள் தெரியும்
உன்னைத் தெரியும்
உன்னிடம் எவ்வளவு என்பதும் தெரியும்.

என்ன உறக்கம் இன்னும் என்பாய்
தொழில் வரியைக் கட்டக் கடைசி நாள் கேட்பாய்
பங்குகள் சரிவதுபற்றி விசனமுடன் பேசுவாய்
தொலைபேசி எண் என்ன என்பாய்

கையாலாகாதவன் என என்னைச் சொல்லாமற் சொல்லி
குற்ற உணர்ச்சியை ஒரு பெரும்பாரம்

சரித்துவிட்டுப் போவாய்
"ஒரே ஒரு கவிதை"
போதும் இந்த ஜென்மம் பொருள்பட

என்பது என் நம்பிக்கை
அதை எழுதிவிடக் காத்துக்கொண்டிருக்கிறேன்
உன் ஆள்காட்டி விரலின் நகத்தால்

என் கதவைச் சுண்டாதே
தயவுசெய்து.

- சுந்தர ராமசாமி 1985


பிரமிக்க வைக்கும் தூய்மையான உறுதியான நம்பிக்கை. இந்த கவிதையை சு.ரா. எழுதிய போது அவருக்கு வயது 54 இருக்கும். 27 வயதில் இப்படியெல்லாம் நான் கவிதையில் நம்பிக்கை வைத்தால் என் வீட்டில் தலையில் குட்ட வருவார்கள் :)) so இந்த கவிதை தரும் செய்தியை let me generalise - "have passion for your work, no matter what".

No comments: