Wednesday, May 15, 2019

உள்ளெரியும் தீ

கண்ணீர் பெருகி
கழுவிப் பார்த்தும்
களைய மறுக்கும்
கண்களில் சோகக்கறை

முகத்தில் பழக்கமில்லா
புன்னகையொன்றை
பொருத்திப் பார்க்க
உதடுகள் நடிக்கும்

விருப்பமில்லா
வார்த்தைகள் விழுந்து
என்னை விலக விடு
என்று இறைஞ்சும்

மனதில் சுமக்க முடியா
பாரம் ஏறி
தோள்கள் துவண்டு புதையும்

சவமாய் சரிய
சாத்தியம் இருந்தும் -
உள்ளெரியும் தீயோ
முன்னே செல்
இன்னும் வெல் - என்று
செயலில் ஓங்கி ஒலிக்கும்
உலகம் நின்று கேட்கும்

No comments: