Wednesday, May 3, 2017

என்னால் முடிந்தது

இல்லாத காரணம் சொல்லி
உன்னை தொலைபேசியில்
அழைத்திருக்கலாம்

மணிக்கொருதரம் ஏதேனும்
குறுஞ்செய்தி அனுப்பியிருக்கலாம்

சரியாக திட்டமிட்டு
நம் சந்திப்பை
நிகழ்த்தியிருக்கலாம்

பேச்சினூடே உன் புன்னகையின்
பேரழகை சிலாகித்து
சில வார்த்தைகள்
சேர்த்திருக்கலாம்

குறைந்தபட்சம்
உன் பிறந்தநாளன்று முதல்ஆளாக வாழ்த்தியிருக்கலாம்

என்ன செய்வது?
என்னால் முடிந்ததெல்லாம் -
பெருவனத்தில்
என்றேனும் நீ வந்து பறிக்க
காத்திருக்கும் ஒற்றை பூவாய்
உனக்கான ஒரு கவிதையை
எழுதிவிடுவது தான்.

No comments: