Monday, December 7, 2009

பைத்தியக்காரன்

திட்டங்கள் தீட்டி
வியூகம் வகுத்து
நேர்த்தியாய் பேசி
நேரம் பார்த்து தாக்கி
வேண்டிய அளவு குழைந்து
இடம் பார்த்து குரலுயர்த்தி
தேவைக்கேற்ப  விடுத்து எடுத்து
பட்டும்படாமல் முன்னகர்ந்து
சிரிப்பில் சமாளித்து
பரிசுத்தமான பிம்பம் பொருத்தி
நீங்கள்
வெற்றி மகுடம் சூடிக் கொண்டீர்கள்.

நானோ
வெறும் பாசம் கொண்டலைந்து
பைத்தியமானேன்.

2 comments:

ர.கிருஷ்ணசாமி said...

உங்கள் கவிதைகளை பின்னூட்டமிடாமல் படித்துவருபவன் நான்.

இன்னும் நிறைய எழுதவேண்டும் நீங்கள்.

வாழ்த்துக்கள்.

-ganeshkj said...

நன்றி கிருஷ்ணசாமி.
முயற்சிக்கிறேன் :)