Friday, July 25, 2008

வன்முறை

எதிர் பெர்த்தில் இருவர் மட்டுமே அமர்ந்திருக்க
காலியிடத்தில் வசதியாக கால்களை நீட்டிக்கொண்டு
இரயில் தொட்டிலில்
மற்றுமொரு கவிதைத் தொகுப்பில் ஆழ்ந்திருந்தேன்
நான்கு பக்கங்கள் கடப்பதற்குள்
துர்நாற்றம் வீசத் தொடங்கியது
சிநேகமில்லாத பார்வையோடு
எதிர்புறம் இருந்தவர்
சாக்ஸ் அணிந்த கால்களை
பதிலுக்கு நீட்டியிருந்தார்

மன்னிக்கவும் எனச்சொல்லி
கால்களை இறக்கிக் கொண்டேன்
இருந்தும் துர்நாற்றம் இறங்க
நேரம் பிடித்தது

/26th July, 2008

1 comment:

MSK / Saravana said...

வன்முறையேதான்..
கவிதை நன்று..
:)

இன்னும் நிறைய எழுதுங்கள்..
:)