திருமணம் முடித்து
பிள்ளைகள் பெற்றெடுத்து
வளர்த்து ஆளாக்கி
பேரன் பேத்திகள் பார்த்து
ஆடி அசந்து
நடைதளர்ந்து
நினைவுகளை அசைபோட்டு
உயிர்க்கும் போதும் -
வாழ்வில் நிகழாமலே போய்விட்ட
காதல் வந்து
கண்கள் கசக்கும்
பொங்கும் பெருமூச்சின் அனற்காற்று
யாரும் காணாமல் அவசரமாய்
கண்ணீர் உலர்த்தும்
-ganeshkj
No comments:
Post a Comment