Sunday, February 23, 2025

பெருமூச்சு

திருமணம் முடித்து
பிள்ளைகள் பெற்றெடுத்து

வளர்த்து ஆளாக்கி

பேரன் பேத்திகள் பார்த்து

ஆடி அசந்து

நடைதளர்ந்து

நினைவுகளை அசைபோட்டு

உயிர்க்கும் போதும் -

 

வாழ்வில் நிகழாமலே போய்விட்ட

காதல் வந்து

கண்கள் கசக்கும்

 

பொங்கும் பெருமூச்சின் அனற்காற்று

யாரும் காணாமல் அவசரமாய்

கண்ணீர் உலர்த்தும்


-ganeshkj