ஒரு பெண்ணின்
மாறாத பேரன்பில்
மன்னிக்கும் கருணையில்
உள்ளங்கை கதகதப்பில்
உச்சிமுகரும் பெருமிதத்தில்
கண்பார்வையின் நிழலில்
கண்டிக்கும் அக்கறையில்
வழிநடத்தும் பிரார்த்தனையில்
வலி ஆற்றும் புரிதலில்
வாழ்ந்துவிடுவதைத் தவிர
வேறென்ன உன்னதம்
வாய்த்துவிடும்
இந்த வாழ்க்கைக்கு
-ganeshkj