Monday, March 3, 2025

உன்னதம்

ஒரு பெண்ணின்

 

மாறாத பேரன்பில்

மன்னிக்கும் கருணையில்

 

உள்ளங்கை கதகதப்பில்

உச்சிமுகரும் பெருமிதத்தில்

 

கண்பார்வையின் நிழலில்

கண்டிக்கும் அக்கறையில்

 

வழிநடத்தும் பிரார்த்தனையில்

வலி ஆற்றும் புரிதலில்

 

வாழ்ந்துவிடுவதைத் தவிர

 

வேறென்ன உன்னதம்

வாய்த்துவிடும்

இந்த வாழ்க்கைக்கு


-ganeshkj

Sunday, February 23, 2025

பெருமூச்சு

திருமணம் முடித்து
பிள்ளைகள் பெற்றெடுத்து

வளர்த்து ஆளாக்கி

பேரன் பேத்திகள் பார்த்து

ஆடி அசந்து

நடைதளர்ந்து

நினைவுகளை அசைபோட்டு

உயிர்க்கும் போதும் -

 

வாழ்வில் நிகழாமலே போய்விட்ட

காதல் வந்து

கண்கள் கசக்கும்

 

பொங்கும் பெருமூச்சின் அனற்காற்று

யாரும் காணாமல் அவசரமாய்

கண்ணீர் உலர்த்தும்


-ganeshkj