Sunday, May 9, 2010

ஒரு காதல் கதை

ஒரு பெண்
ஒரு ஆண்
அவள் உலகம்

ஒரு ஆண்
ஒரு பெண்
அவன் உலகம்

அவனும் அவளும்
சங்கமிக்கப் பணித்தாள்
ஒரு தேவதை

இரு உலகங்கள்
மோதிக்கொண்ட அதிர்ச்சியில்
அவர்கள் பிறகு மயக்கம் தெளிந்தார்கள்

அவள்
உடைந்த தன் உலகத்துண்டுகளை
தலையணைக்குள் புதைத்துக் கொண்டு
தேவதையை சபித்தாள்

அவன்
உடைந்த தன் உலகத்துண்டுகளை
வெறிகொண்டு
தேவதை மேல் விட்டெறிந்தான்

எல்லாம் தெரிந்த தேவதை
ஒரு குழந்தையை
அவர்களுக்குப் பரிசளித்தாள்

பிறகென்ன
அந்தக் குழந்தையே
அவர்கள் உலகமாகிப் போனது.

No comments: