Tuesday, January 6, 2009

பலி

ஞானச்செறுக்கேறி சித்தனாய் பித்தனாய்
காடூடே போனவனும்

மேலான பொருள் தேடும் வேட்கையோடு
பேரண்டம் புரட்டிவிடப் புறப்பட்டவனும்

மோகம் வழிந்தோடும் மெல்லிரவில்
சதைப்பிண்டம் குத்தித் தின்று
போதை தலைக்கேறும் உச்சத்தில்
சித்தாந்தக் கூவலோடு சரிந்தவனும்

உண்டு கழித்துறங்கி வேறொன்றும் உணராமல்
மந்தைக்குள் பயமின்றி ஒளிந்திருக்கும் மூர்க்கனும்

மிக உரிமையோடு சிதைக்கக்கூடும்
முன்பொருநாள்
குருவிகள் வந்தமரும் மரக்கிளையில்
அண்ணாந்து ஊஞ்சலாடும்
சின்னப்பெண்ணொருத்தி
சிருஷ்டித்த கனவுகளை.

/6th Jan, 2009

3 comments:

MSK / Saravana said...

அட்டகாசம்..

MSK / Saravana said...

ரொம்ப காலம் கழிச்சி வந்து ஒரு கவிதை பதிவு எழுதி இருக்கீங்க.. நானும் ரொம்ப நாள் கழிச்சி வந்து படிக்கிறேன்..
இனி அடிக்கடி கவிதை பதிவிடவும்..

Anonymous said...

I know you, Don't I?
http://aalapana.blogspot.com