Monday, March 3, 2025

உன்னதம்

ஒரு பெண்ணின்

 

மாறாத பேரன்பில்

மன்னிக்கும் கருணையில்

 

உள்ளங்கை கதகதப்பில்

உச்சிமுகரும் பெருமிதத்தில்

 

கண்பார்வையின் நிழலில்

கண்டிக்கும் அக்கறையில்

 

வழிநடத்தும் பிரார்த்தனையில்

வலி ஆற்றும் புரிதலில்

 

வாழ்ந்துவிடுவதைத் தவிர

 

வேறென்ன உன்னதம்

வாய்த்துவிடும்

இந்த வாழ்க்கைக்கு


-ganeshkj